Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்தை காக்க உதவும் ஆவாரம் பூ !!

Webdunia
திங்கள், 23 மே 2022 (18:09 IST)
ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.


ஆவாரம் பட்டை, ஆவாரைப் பூ கொழுந்து, வேர் இவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக் கொள்ளுங்கள்.

இப்போது நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும் மூலம் குணமாகும்..
உடல் வலிமை பெற

ஆவாரம் பூ பட்டை, பனங்கல்கண்டு , வால்மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி அதில் பால் கலந்து குடித்து வர உடலில் வலிமை பெறும் சர்க்கரை நோய் கட்டுக்குள் அடங்கும்.

மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க ஆவாரம் பூ, அசோக மட்டை, மருதம்பட்டை, ஆவாரம்பூ, திரிகடுக பொடி, திரிபலா பொடி அனைத்தையும் சம அளவு எடுத்துக்கொண்டு பொடிசெய்து மாதவிடாய் நாட்களில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலியானது சரியாகிவிடும்.

ஆவாரம் பூக்களுடன் பருப்பு வெங்காயம் சேர்த்து கூட்டு போல செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பலம் கூட்டும் தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊறவைத்து அந்த தண்ணீரை குடியுங்கள் அது தாகம் போக்கும். சிறுநீரை பெருக்கும் உடல் துர்நாற்றத்தை துரத்தும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலுக்கு கேடு விளைக்கிறதா பிஸ்கட்.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கோடையில் அதிகரிக்கும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று: என்ன செய்ய வேண்டும்?

நடனம் ஆடினால் ரத்த அழுத்தம், மனச்சோர்வு பிரச்சனை சரியாகுமா? ஆய்வு முடிவு..!

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments