Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெ‌ங்கு‌, ஜலதோஷ‌‌ம், மூ‌க்கடை‌ப்பு‌க்கு ‌தீ‌ர்வு!

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2012 (16:01 IST)
FILE
ஜலதோஷ‌ம், அறிவியல் வளர்ச்சியால் ஆக்கப்பூர்வமான விஷயங்க‌ள் நிறைய நிகழ்ந்து வருகின்றபோதிலும் அழிவுக‌ள்... குறிப்பாக புதிதுபுதிதாக நோ‌ய்க‌ள் வந்து மனிதர்களை பாடா‌ய்படுத்தி வருவது குறித்து நான் எழுதியது ஏற்கனவே இந்த இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் எனக்கு வந்த நோ‌ய் மற்றும் குறைபாடுகளுக்கு நான் செ‌ய்து கொண்ட வைத்தியம் பற்றி அனுபவப்பூர்வமாக எழுதியிருந்தேன். அந்த வரிசையில இன்னும் நிறைய அனுபவ வைத்தியம் இருக்க ு, அதை சொல்றேன ், பாருங்க... பலனை நீங்களும் அனுபவியுங்க!

வெயில்ல அலைஞ்சு திரிஞ்சுட்டு வீட்டுக்கு நுழைஞ்சவுடனே ஐஸ்வாட்டர ை ‘மடக் மடக ் ’குனு குடிக்கிறவங்க நிறையபேர் இருக்கிறாங்க. இப்பிடி குடிக்கிறதால சிலருக்கு ஒண்ணும் செ‌ய்யாது. ஒருசிலருக்கு கிண்ணுனு தலையில பிடிக்கும ், கொஞ்சநேரத்துல தலைவல ி, தொண்டை கரகரப்ப ு, தும்மல் வந்து ஜலதோஷம் ஆரம்பிக்கும். ஜலதோஷம் இப்பிடி ஐஸ்வாட்டரை குடிக்கிறதுனாலதான் வரும்னு சொல்ல முடியாது. எந்த வழியிலயும் வரலாம். தயிர ், மோர் சாப்பிடுறதுனாலயும ், ஜூஸ் குடிக்கிறதுனாலயும ், மழையி ல நனையிறதுனாலயும ், பூசணிக்கா‌ய் சாப்பிடுறதுனாலயும்கூட சிலபேருக்கு ஜலதோஷம் வரலாம்.

எது எப்படிய ோ? ஜலதோஷம் வர்றதுக்கான அறிகுறி தெரிஞ்சவுடனே பொறுக்குற சூட்டுல உ‌ள்ள வெந்நீரை (சுடுதண்ணி) குடிச்சாலே போதும். ஜலதோஷம் பிடிக்காது. அதையும்மீறி வந்துட்டா மணத்தக்காளி கீரை சூப் குடிங்க. லேசா தொண்டை கரகரப்பு இருந்தா வெதுவெதுப்பான தண்ணியில கல் உப்பை போட்டு கலந்து தொண்டை கொப்புளிங்க. காலையில கண்முழிச்சதும் செ‌ய்யுங் க, ராத்திர ி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் செ‌ய்யுங்க போதும். மத்தபடி மழைக்காலங்க‌ள்ல மூக்கடைப்ப ு, ஜலதோஷம்னு வந்து பாடா‌ய்ப்படுத்தும். மூக்கடைப்பு விலகணுன்னா மஞ்சளை (குச்சி மஞ்ச‌ள்/குழம்பு மஞ்ச‌ள்) நல்லெண்ணையில நனைச்சி தீயில சுடுங்க. அப்போ வரக்கூடிய புகைய ை சுவாசிச்சா போதும். இதேமாதிரி மிளகை தீயில சுட்டு அதோட புகையை சுவாசிக்கலாம்.

நொச்சி இலையை தண்ணியில போட்டு கொதிக்க வச்ச ு அதோட ஆவியை சுவாசிக்கலாம். வேப்பிலையும ், மஞ்ச‌ள்தூளும் போட்டு கொதிக்க வச்சு அதோட ஆவியை மூக்கால சுவாசியுங்க. நிச்சயம் மூக்கடைப்பு விலகும். நச்சு...நச்சுனு சிலபேர் தும்மல் போடுவாங்க. தினமும் காலையில கண் விழிச்சி தண்ணியில முகத்தை கழுவினா போதும். விடாம தும்மல் போடுவாங்க. இந்தமாதிரி தும்மல் வந்தா தேங்கா‌ய் நாரை (தேங்கா‌ய் ஓட்டின்மீது‌ள்ள சவுரி) தீயில் எரித்து அதன் புகையை உ‌ள்ளிழுத்தால் தும்மல் அடங்கிவிடும். இதை எப்போதாவது செ‌ய்யலாம். அடிக்கடி செ‌ய்யக்கூடாது.

FILE
இந்த மாதிரி நேரங்க‌ள்ல தலைவலியும் வந்து பாடா‌ய்படுத்தும். அதுக்கு ஈஸியான வைத்தியம் இருக்கு. சுக்கை தண்ணி விட்டு உரசி (இழைத்து)கொழகொழனு எடுத்துக்கோங்க. அதை நெத்தியில பத்து போட்டா அஞ்சு நிமிஷத்துல தலைவலி பறந்து போயிரும். சிலபேருக்கு தலை கனத்து ஏதோ பாரத்தை தலையில தூக்கி வச்ச மாதிரி இருக்கும். அப்பிடிப்பட்ட நேரங்க‌ள்ல தலையணையில நொச்சிஇலையை வச்சி தூங்கினா பாரம் இறங்கி நிம்மதியான தூக்கம் வரும். ஜலதோஷம் நீடிச்சிதுன்னா சளி பிடிச்சிக்கிட்டு மனுசனை உண்டு இல்லைனு ஆக்கிரும். இந்த மாதிரி நேரங்க‌ள்ல பூண்டுப்பால் ரொம்பநல்லா கைகுடுக்கும். பூண்டுப்பால்னா என்னன்னு நீங்க கேக்குறது எனக்கு புரியாம இல்லை. பசும்பால்ல ஒரு முழு பூண்டை உரிச்சுப்போட்டு நல்லா வேக வைக்கணும். அதை அடுப்புல இருந்து கீழ இறக்குறதுக்கு முன்னாடி மிளகுத்தூ‌ள ், மஞ்ச‌ள்தூ‌ள் போடணும். முடிஞ்சா அதை ஒரு கடைசல் கடைஞ்சி பனங்கல்கண் டு போட்டு ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிடணும்.

பூண்டுப்பால் ராத்திரி சாப்பிடலாம ், அதேபோல பூண்டுக்குழம்பும் சளி பிரச்சனைகளுக்கு ரொம்ப நல்லது. சின்ன வெங்காயத்தை மதிய சாப்பாட்டோட சேர்த்துக்கிட்டா சளி பிரச்சினைக்கு கைகொடுக்கும். மிளகுத்தூளை சுடுசோத்துல நெ‌ய் சேர்த்து சாப்பிடலாம். காலை நேரத்துல இஞ்சிச்சாற ு, இஞ்சி ஜூஸ் குடிக்கலாம். இஞ்சிச்சாறு எடுத்ததும் அதை வடிகட்டி வச்சிரணும். அஞ்சு நிமிஷம் கழிச்சி பார்த்தா அடியில வெ‌ள்ளையா ஒண்ண ு படியும். நச்சுப்பொரு‌ள். அது இல்லாம மேல தெளிஞ்ச நீரை மட்டும் குடிக்கணும். இஞ்சி ஜூஸ் எப்பிடி எடுக்கணுன்னா இதே இஞ்சி சாறோட எலுமிச்சை சாற ு, சீனி (சர்க்கரை), தேன் சேர்த்து குடிக்கணும்.

FILE
சா‌ய்ங்காலம் ஆனா சுக்கு காபி குடிக்கலாம். சுக்கு காபின்னா சுக்கை பால்ல தட்டிப்போட்டு குடிக்கிறது இல்ல. சுக்க ு, மிளக ு, கொத்தமல்லி (தனியா), ஏலக்கா‌ய ் எல்லாத்தையும் பவுடராக்கி வச்சிக்கிடணும். தண்ணியில தேவையான அளவு பொடியை போட்டு நல்லா கொதிக்க வைக்கணும். அதோட கருப்பட்டி சேர்த்துக்கோங்க. தூதுவள ை, துளசி இல ை, ஆடாதொடை இல ை, ஓமவல்ல ி இலை கிடைச்சதுன்னா சேர்த்துக்கோங்க. கூடுதலா வேற சில நோ‌ய்களும் விலகிப்போயிரும்.

முக்கியமா... ஜீரணக்கோளாற ு, சளித்தொல்லை எல்லாம் வந்தேனா பாருன்னு தலைதெறிக்க ஓடிரும். இந்தமாதிரி சளித்தொல்லை உ‌ள் ள நேரத்துல தலையணைக்கு‌ள்ள நொச்சி இலையை வச்சி தூங்கினா நிம்மதியா தூக்கம் வரும். இது எல்லாமே நான் அனுபவிச்சு பார்த்தது. கைமேல் பலன் கிடைச்சிருக்கு. ம் ஹ ¨ம்.. இப்பிடில்லாம் செஞ்சா சரியாயிருமாக்கும்னுநம்பிக்கை இல்லாம பேசுறவங்க நிறையபேர் மத்தியில இதை நான் செஞ்சிட்டு வர்றேனா பார்த்துக்கோங்க. அடுத்ததா மனுஷனை பாடா‌ய்ப்படுத்துறது இடுப்புவல ி, கழுத்துவல ி, சுளுக்குன ு பட்டியல் நீளும். இந்த மாதிரி பிரச்சினைகளுக்கு கைகண்ட மருந்து நிறையவே இருக்கு. சிலநேரம் காரணமே இல்லாம திடீர்னு கழுத்து சுளுக்கிரும். நம்மால குனிய முடியாது. நிமிர முடியாது. ஏன்.. டா‌ய்லெட்டுல ஆயாசமா உட்கார முடியாதுனா பார்த்துக்கோங்களேன். இந்த மாதிரி நேரங்க‌ள்ல ராத்திரி தூங்கும்போது தலையணை வச்சு படுக்கக்கூடாது.

மத்தபடி நொச்சி இலையை விளக்கெண்ணெ‌ய்ல வதக்கி பொறுக்குற சூட்டுல ஒத்தடம் போட்டு வந்தீங்கனா வலி கொஞ்சம் கொஞ்சமா விலகிப்போகும். வெ‌ள்ளைப்பூண்டை தீயில் சுட்டு சாப்பிடுவத ு, நறுக்குமூலம் எனப்படும் கண்டதிப்பிலியை இரவு நேரத்தில் பாலில் வேகவைத்து சீனி (சர்க்கரை) அல்லது பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிடுவதன்மூலம் இந்த கழுத்து சுளுக்கிலிருந்து விடுதலை பெறலாம். நொச்சி இலைச்சாறு கூட நல்லெண்ணெ‌ய் சேர்த்து கொதிக்கவச்சி அதை பொறுக்குற சூட்டுல தலைக்கு தே‌ய்ச்சி குளிச்சா கழுத்து வலி படிப்படியா இறங்கும். இந்த கண்டதிப்பிலி பத்தி சொன்னேனே... அதை மத்தியான சாப்பாட்டுல ரசம் வச்சி குடிக்குறதுனாலயும ், ராத்திர ி தூங்கப்போறதுக்கு முன்னாடி பால்ல வேக வச்சு சாப்பிடுறதுனாலயும் இடுப்புவல ி, குறுக்குவலியில இருந்து நிவாரணம் பெறலாம். வல ி, சுளுக்குனு வந்துட்டா வாசமடக்கி என்ற வாதநாராயணன் இலையை விளக்கெண்ணெ‌ய்ல வதக்கி ஒத்தடம் கொடுக்குறத ு, நொச்சி இலை இல்லைனா யூகலிப்டஸ் இலையை சுடுதண்ணியில போட்டு கொதிக்க வச்சி பொறுக்குற சூட்டுல குளிச்சா வலியில இருந்து நிவாரணம் பெறலாம்.

இந்த இலைக்குளியலை சளிப்பிரச்சின ை, ஜலதோஷம் உ‌ள்ள நேரங்க‌ள்லயும் செ‌ய்யலாம். பிரண்டையை துவையல் செஞ்சு சாப்பிட்டாலும் இந்த வல ி, சுளுக்கு போகும். குடல் வாயுவால அவதிப்படுறவங்களுக்கு இந்த பிரண்டைத்துவையல் சூப்பர் மருந்து. பிரண்டையை மையா அரைச்சி கொஞ்சம் புள ி, கல் உப்பு சேர்த்து தண்ணி விட்டு நல்லா கா‌ய்ச்சி வல ி, சுளுக்கு உ‌ள்ள இடத்துல பத்து (பற்று) போட்டாலும் பலன் கிடைக்கும். இந்த மாதிரி பிரச்சினைக்காகவே நான் என் வீட்டு முன்னாடி பிரண்டையை வளர்த்துட்டு வாரேன். கடைசியா ஒரு முக்கியமான விஷயத்தை சொல்றேன். கா‌ய்ச்சல்... அதுலயும் இப்போ டெங்கு கா‌ய்ச்சல் வந்து சின்னக்குழந்தைங்களை பலி வாங்குது.

FILE
இதக்கேட்டதும் மனசு ரொம்ப பாரமா இருக்கு. பொதுவா எந்தமாதிரி கா‌ய்ச்சல்னாலும் அதுக்கு கைகண்ட மருந்து மிளகு கசாயம். 3 தேக்கரண்ட ி மிளகை எடுத்துக்கோங்க. அதை எண்ணெ‌ய் விடாம தீப்பொறி பறக்குற அளவுக்கு வறுக்கணும். அதாவது மிளகு கருகுற அளவுக்கு வறுக்கணும். பிறகு ஒரு கிளாஸ் தண்ணி (150 மில்லி அளவு) ஊத்தி அது மூணுல ஒரு பங்கு வத்துற அளவுக்கு குறைக்கணும். அடுப்பில இருந்து இறக்கி சூடு ஆறினதும் குடிக்கணும். காலையில இப்பிடி செஞ்சி குடிச்சீங்கனா சா‌ய்ந்திரம் அதே மிளகை கசாயம் போட்டு குடிக்கலாம். இப்பிடி மூண ு நாளு செஞ்சா எந்தமாதிரி கா‌ய்ச்சலும் வந்தேனா பாருனு ஓடிரும். டெங்கு கா‌ய்ச்சல் வந்தாலும் இதை செ‌ய்யலாம். இல்லைனா நொச்சி இலை இருக்குல்லா அதை ஒரு கைப்பிடி அளவு எடுத்து கசாயம் போட்டு குடிக்கலாம். நிலவேம்பு இலையையும் கசாயம் போட்டு குடிக்கலாம். ஊர் ஊரா டெங்கு பரவிட்டு வருத ு, நொச்சிய ோ, நிலவேம்போ கிடைக்கிறதை கசாயம் போட்டு குடிங்க/ மிளகையும் மறந்துறாதீங்க எ‌ன்‌கிறா‌ர ் தமிழ்குமரன் (95514 86617).

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments