அதில் ஒரு கிராம் எடுத்து காலை, மாலை இருவேளையும் தேனில் கலந்து உட்கொண்டு வர ஆஸ்துமா கட்டுப்படும்.
கண்டங்கத்திரியை நன்கு இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து நன்கு நீர்சுண்டும் படி காய்ச்சவும். அதை உடலில் பூசி குளித்து வர உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும்.
கண்டங்கத்திரி வேர், சிற்றாமுட்டி வேர், பேராமுட்டி வேர், சுக்கு அனைத்தையும் சம அளவு எடுத்து கஷாயமாக்கி குடித்து வர சுரம், கை, கால் வலி, வாதப்பிடிப்பு குணமாகும்.