உதாரணமாக சொல்வதென்றால், ஏதோ காரணத்தால் வருகின்ற தலைவலிக்கு சுக்கை (காய்ந்த இஞ்சி) நீர் விட்டு இழைத்து நெற்றியில் பற்று போட்டால் சில நிமிடங்களில் தலைவலி பறந்து போகும். இது அனுபவப்பூர்வமான உண்மை. இன்னும் சொல்லப்போனால் சில ஆண்டுகளுக்குமுன் எனக்கு சைனஸ் தொந்தரவும், பொடுகுத்தொல்லையும் வந்து பாடாய்ப்படுத்தியது. என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலனில்லை.
சைனஸுக்காக எனக்குத்தெரிந்த காது- மூக்கு- தொண்டை மருத்துவரிடம் சென்றபோது ஆபரேஷன் பண்ணவேண்டும் என்றார். வீடு திரும்பிய நான், ஏற்கனவே இயற்கை வைத்தியம் பற்றி அறிந்து வைத்திருந்ததால் எனக்கு நானே சுயபரிசோதனை செய்து கொண்டேன். அதாவது, நொச்சி இலையை பறித்து வந்து அதனுடன் சிறிது நல்லெண்ணெய் கலந்து அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைத்தேன். சூடு ஓரளவு ஆறியதும் பொறுக்கும்சூட்டில் உச்சந்தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தேன். எண்ணெய் பிசுக்கு போவதற்காக சீயக்காய் தேய்த்தேன். வாரத்துக்கு இரண்டுநாள் வீதம் சுமார் ஒன்றரை மாதம் செய்தேன். மூக்கடைப்பு மெல்லமெல்ல விலகி சைனஸ் தொந்தரவிலிருந்து மீண்டேன். ஆனாலும் இப்போதும்கூட தயிர், மோர், குளிர்ந்த பானங்கள் சாப்பிட்டால் கொஞ்சம் மூக்கடைப்பு ஏற்படும். அப்போது கொஞ்சம் வெந்நீர் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.
ஆனால் இதே சைனஸுக்காக ஆபரேஷன் செய்தால் மீண்டும் மீண்டும் அந்த தொந்தரவு வரும், ஆபரேஷன் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். இதற்கெல்லாம் இயற்கை வைத்தியமுறை நல்ல தீர்வாக அமையும். அடுத்ததாக எனக்கு வந்த பொடுகுத்தொல்லைக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டேன். சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயத்தை எடுத்து நைசாக அரைத்தேன். அதன்பிறகு நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துகொண்டு அதனுடன் சேர்த்து அடித்தால் ஷாம்பு மாதிரி வரும். அதை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் (சீயக்காய் தேய்த்து) குளிக்க வேண்டும்.
இப்படி வாரம் ஒருமுறை அல்லது இரண்டுமுறை என ஒருமாதம் செய்தபோது பொடுகுத்தொல்லையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்தது. இதேபோல் கால்ஆணியால் பாதிக்கப்பட்ட நான் எளிய சிகிச்சை மேற்கொண்டு வெற்றி கண்டேன். பொதுவாக கால்ஆணி என்றால் அறுவை சிகிச்சை அது, இது என்று அலையவிடுவார்கள். என் சிறுவயதில் என் அப்பா கால்ஆணியைப்போக்க முரட்டு வைத்தியம் செய்வார். அதாவது ஆணி இருக்கும் இடத்தை பிளேடால் வட்ட வட்டமாக வெட்டி எடுப்பார். அதன்பிறகு அந்த
இடத்தில் கருப்பட்டியை (பனைவெல்லம்) வைத்து நெருப்புத்துண்டுகளால் சூடுபடுத்துவார். இப்படி செய்யும்போது உயிர் போவதுபோல் இருக்கும். ஆனால் மிக மிக எளிய சிகிச்சை இருக்கிறது.
அதாவது அம்மான்பச்சரிசி என்னும் சிறு செடியினம் ஒன்று உள்ளது. இதன் தண்டுப்பகுதியை உடைத்தால் பால் வரும். அந்த பாலை கால் ஆணி உள்ள இடத்தில் சுமார் 20 முதல் 30 நாட்கள் வரை தடவி வந்தால் முழுமையாக குணம் கிடைக்கும். இது எனது அனுபவ வைத்தியத்திற்கு நல்லதொரு சாட்சி. என்னுடன் பணிபுரியும் சிலருக்கு மூலம், சைனஸ் கோளாறுகளுக்காக சில மருந்துகளை செய்து கொடுத்துள்ளேன். ஏற்கனவே எனக்கு வந்த சைனஸ் கோளாறுக்காக நான் செய்துகொண்ட மருத்துவம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சிலருக்கு உள்ளுக்கு சாப்பிடும் மருந்து தயார் செய்து கொடுத்தேன். சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை, ஓமம், ஆகியவற்றை நன்றாக பொடி செய்து கொடுத்தேன். நல்ல நிவாரணம் கிடைத்தது.
மூல நோயால் அவதிப்பட்ட 2 பேருக்கு சாப்பாட்டில் கலந்து உண்ணும் பொடி ஒன்றை தயார் செய்து கொடுத்தேன். வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை போன்றவற்றை இளம் வறுப்பாக வறுத்து பொடி செய்து கொடுத்தேன். கூடுதலாக, துத்து இலையை கொடுத்து அதை விளக்கெண்ணெய்யில் வதக்கி பொறுக்கும் சூட்டில் வைத்து கட்டி வர சொன்னேன். இப்போதெல்லாம் அவருக்கு மூலத்தின் தொல்லையே
கிடையாது.
அடுத்ததாக, சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணிக்கு உடல்எடை கூடி அவதிப்பட்டு வந்தார். அவருக்கு கொள்ளுப்பயறை ஒன்றிரண்டாக உடைத்து அதனுடன் நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய இந்துப்பு என்னும் பொருளை கலந்து கொடுத்தேன். இதை சாப்பிட்டு வந்த அவர் 20, 30 நாட்களில் நன்றாக எடை குறைந்திருப்பதாக கூறினார். இத்துடன் கூடுதலாக நெல்லிவற்றல், கடுக்காய் தோல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை சம் அளவு எடுத்து ஒன்றிரண்டாக பொடித்து கொடுத்தேன். இதை இரவு உறங்கப்போகுமுன் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் சாறை குடிக்கும்படி சொன்னேன். இதனால் அவருக்கு வயிற்றில் உள்ள பாரம் குறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாக சொன்னார். 10 நாட்களில் 5 கிலோ எடை குறைந்ததாக சொன்னார். இடுப்பின் பின்பகுதி பெருத்து காணப்பட்ட அவருக்கு இப்போது சிறுத்து காணப்படுகிறது. இதை பள்ளி மாணவி ஒருத்திக்கும் கொடுத்து நல்ல பலனை அடைந்தேன்.
மூலத்தின் தொல்லையில்லை
'மூல நோயால் அவதிப்பட்டவருக்கு வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை போன்றவற்றை வறுத்து பொடி செய்து கொடுத்தேன். கூடுதலாக, துத்து இலையை கொடுத்து அதை விளக்கெண்ணெய்யில் வதக்கி பொறுக்கும் சூட்டில் வைத்து கட்டி வர சொன்னேன். இப்போது மூலத்தின் தொல்லை கிடையாது'
இவை எல்லாவற்றுக்கும் மேலாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த சிலருக்கு எனது அனுபவத்தில் நான் கண்ட ஒரு மருந்து கைமேல் பலனை தந்திருக்கிறது. பெரிய நெல்லிக்காய் சாறு 10 மில்லி, பாகற்காய் சாறு 25 மில்லி எடுத்து இரண்டையும் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சொன்னேன். இப்படி 40 நாட்கள் சாப்பிட்டு வந்த 7 பேருக்கு சர்க்கரையின் அளவு சமநிலைக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே அலோபதி மருத்துவத்தில் அவர்கள் சாப்பிட்டு வந்த மாத்திரையை குறைத்துவிட்டு இயல்பாக வாழ்கிறார்கள். சிலர் விரும்பும்போது இனிப்பு பண்டங்களை சாப்பிட்டும் பெரிய அளவில் மாற்றம் ஏதும் நிகழவில்லை என்கிறார்கள். சர்க்கரை நோய்க்காக நான் சொன்ன இந்த வைத்தியத்திற்காக இதுவரை நான் யாரிடமும் காசு வாங்கவில்லை என்கிறார் மூலிகை வைத்தியர் தமிழ்குமரன். அவரை 95514 86617 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.