கறிவேப்பிலைக்கு இருக்கும் மருத்துவ குணங்களைப் படித்தால் இனி எப்போதும் கறிவேப்பிலையை தூக்கி எறிய மாட்டீர்கள்.
உடல் உஷ்ணமாக இருப்பவர்களும், உஷ்ணமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கும் கறிவேப்பிலை தான் உரிய மருந்தாகும்.
அதாவது, கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதன் சாற்றை, 100 கிராம் தேங்காய் எண்ணையில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும்.
இந்த எண்ணெயை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தொடர்ந்து தலைக்குத் தடவி வர உடல் உஷ்ணமா அப்படி என்றால் என்ன என்று கேட்பீர்கள்.
இப்படி செய்து வந்தால் இளம் வயதில் நரை வராது. கண் பார்வையின் சக்தி அதிகப்படும்.
செய்து பாருங்கள்.. நல்ல பலன் கிட்டும்.