நம்மில் பலர் அசைவ உணவுகளுக்கு அடிமைகளாகியிருப்போம். ஒரு சிலருக்கு தினமும் இரண்டு வேளை அசைவம் சாப்பிடாவிட்டால், உணவு எடுத்துக் கொண்டது போலவே உணர மாட்டார்கள். அசைவம் என்பது ஆரோக்கியமான முறையில் செய்யப்பட்டு, அதற்கான அளவுகளுடன் எடுத்துக் கொண்டால் நல்லது.
மாறாக நினைத்த நேரத்தில் அசைவம் எடுத்துக் கொள்வது அஜீரணம் உள்ளிட்ட வேறு சில உடற்கோளாறுகளைத் தோற்றுவிக்கலாம்.
இரவு வேளைகளில் மது அருந்துவோர் இறைச்சி உணவு எடுத்து கொண்டால்தான் அருந்திய மதுவிற்கு பக்க பலமாக இருக்கும் என்று தப்புக் கணக்கு போடுவார்கள். ஆனால் அது உண்மையில்லை.
ஏனெனில் ஏற்கனவே ஆல்கஹால் இறைச்சி உணவுகத ஆகியவற்றை செரிமானம் செய்ய வழக்கத்தை விட அதிக கலோரி தேவைப்படுகிறது. இது இரண்டும் எவ்வாறு சிறந்த சேர்க்கையாக அமைய முடியும்? மேலும் அதனை எரிக்க கூடுதல் நேரமும் தேவைப்படுவதால் தூக்கம் கெட்டுப்போவதும் பலருக்கு நிகழ்ந்துள்ளது.
எனவே இரவு வேளைகளில் குறிப்பாக மது அருந்துபவர்கள் அசைவம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. இட்லி, இடியாப்பம் போன்றவை சிறந்தது.