விமானத்தில் பாலியல் தொல்லை: கண்ணீருடன் புகார் செய்த பிரபல நடிகை

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2017 (11:42 IST)
பிரபல பாலிவுட் நடிகையும், அமீர்கான் நடித்த 'டங்கல்' படத்தில் அவருடைய மகள் கேரக்டரில் நடித்தவருமான சைரா வாசிம், சமீபத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கண்ணீருடன் ஒரு வீடியோவை பதிவு செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

சமீபத்தில் தான் டெல்லியில் இருந்து மும்பைக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்றதாகவும், அப்போது தனக்கு பின்னால் அமர்திருந்த  நடுத்தர வயது சக பயணி ஒருவர் தனது காலால் தனது பின்புறத்தை சீண்டியதாகவும் அந்த வீடியோவில் கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் இதை மற்ற சக பயணிகளோ அல்லது விமான ஊழியர்களோ தட்டி கேட்கவில்லை என்றும்,  இதுதான் நீங்கள் பெண்களுக்கு கொடுக்கும்  பாதுகாப்பா? என்றும் இது தனக்கு ஏற்பட்ட மிக மோசமான அனுபவம் என்றும் அதில் கூறியுள்ளார்

சைரா வாசிமின் இந்த பதிவுக்கு பதில் கூறியுள்ள விஸ்தாரா ஏர்லைன்ஸ் இதுகுறித்து உடனடியாக விசாரணை செய்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து ஒத்துழைப்பும் தருவதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி நட்சத்திர ஹோட்டலில் 6 மாதங்கள் தங்கிய பெண் கைது.. பாகிஸ்தானில் இருந்து பெரிய தொகை வந்ததா?

திருமணமான தாய்மாமா மகளை உறவுக்கு அழைத்த இளைஞர்.. சம்மதிக்காததால் துப்பாக்கியால் சுட்டு கொலை..!

கோவாவில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலை.. பிரதமர் மோடி திறக்கிறார்..!

செங்கோட்டையன் இணைவு!.. தவெகவுக்கு என்ன லாபம்?.. அதிமுகவுக்கு என்ன நஷ்டம்?...

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்