Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்வாணமாக வந்து பெண்களின் உள்ளாடைகளை திருடும் வாலிபர்: காவல்துறை திணறல்

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2017 (16:41 IST)
பெங்களூரு கல்லூரி ஒன்றில் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் நிர்வாணமாக வந்து விடுதி மொட்டை மாடியில் உள்ள பெண்கள் உள்ளாடைகளை திருடிச் செல்வதாக புகார்கள் வந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக காவல்துறையினர் அந்த வாலிபரை பிடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.



 

 
பெங்களூரு மகாராணி கல்லூரியில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நிர்வாணமாக வந்து விடுதி மொட்டை மாடியில் உள்ள பெண்களின் உள்ளாடைகளை திருடிச் சென்று விடுகிறாராம். மேலும் அந்த உள்ளாடைகளை அங்கேயே அணிந்து பார்த்து ரசிப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பே காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினரால் அந்த வாலிபரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் சார்பில் விடுதி மொட்டை மாடியில் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டது. அதில் அந்த வாலிபர் நிர்வாணமாக வந்து உள்ளாடைகளை எடுத்து அணிந்து ரசிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.
 
தன்னை யாரும் பிடித்து விட கூடாது என்பதற்காக அந்த வாலிபர் உடல் முழுவதும் எண்ணெய் பூசி கொண்டு வருவதும் தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை வைத்து அந்த வாலிபரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஈரான் அதிபர் இறப்பிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு!

இரவில் பகலை காட்டிய அதிசயமான விண்கல்! வாய்பிளந்த ஸ்பெயின், போர்ச்சுக்கல் மக்கள்! – வைரலாகும் வீடியோ!

கள்ளக்காதல்! சென்னையில் இளைஞர் ஓட ஓட வெட்டி கொலை..!!

தாய் இறந்தது தெரியாமல் சடலத்துடன் வாழ்ந்த மகளும் பரிதாப பலி! – கர்நாடகாவில் சோகம்!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments