Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விமான பணிப்பெண்ணை கட்டாயப்படுத்தி செல்ஃபி: இளைஞர் கைது

விமான பணிப்பெண்ணை கட்டாயப்படுத்தி செல்ஃபி: இளைஞர் கைது
, புதன், 29 ஜூன் 2016 (12:28 IST)
விமான பணிப்பெண்ணை கட்டாயப்படுத்தி செல்ஃபி எடுக்க முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.


 

 
குஜராத் மாநிலம் தமன் பகுதியைச் சேர்ந்த முகமது அபுபக்கர்(29) என்பவர் மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்துள்ளார். பயணத்தின்போது விமான பணிப்பெண் ஒருவருடன் அவர் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார்.
 
அதற்கு அந்த விமான பணிப்பெண் மறுப்பு தெரிவித்ததுடன், அபுபக்கரை எச்சரித்துள்ளார். பின்னர் அபுபக்கர் கழிவறைக்குள் சென்று புகை பிடித்துள்ளார். இதனால் மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் காவல் துறையினர் அபுபக்கரை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எச்சரிக்கை! - அடுத்த மாதம் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு