Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 கள்ளக்காதலிகளின் உதவியால் மனைவியை கொலை செய்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran
சனி, 2 நவம்பர் 2024 (13:42 IST)
ஒடிசா மாநிலத்தில் இரண்டு கள்ளக்காதலிகளின் உதவியுடன் மனைவியை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த குமார தாஸ் என்பவருக்கு சமீபத்தில் சுபஸ்ரீ என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, குமார தாஸ் இரண்டு பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுபஸ்ரீ, தனது கணவருடன் சண்டை போட்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். பின்னர், குமார தாஸ் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில், சுபஸ்ரீ தூங்கிக் கொண்டிருக்கும்போது குமார தாஸின் இரண்டு கள்ளக்காதலிகள் அவரது வீட்டிற்கு வந்து சுபஸ்ரீக்கு மயக்க மருந்து கொடுத்தனர். தொடர்ந்து அவர் மயக்க மருந்து அளிக்கப்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

முதலில் இது தற்கொலை என குமார தாஸ் தெரிவித்தபோதிலும், காவல்துறையினர் சுபஸ்ரீயின் பிரேதத்தை பரிசோதித்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த அறிக்கையில், சுபஸ்ரீக்கு தொடர்ச்சியாக சில நாட்கள் மயக்க மருந்து கொடுக்கப்பட்டதும், கண்மூடித்தனமாக தாக்குதல் செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குமார தாஸ் மற்றும் அவரது இரண்டு காதலிகள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments