சமூக வலைதளமான வாட்ஸ்ஆப் மூலம் 1500 பெண்களுக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்பிய இளைஞர் ஒருவரை டெல்லியில் கைது செய்துள்ளனர் காவல் துறையினர்.
முகமது காலித் (31) என்பவர் டெல்லி தேர்கு பகுதியில் பேக் கடை ஒன்று வைத்துள்ளார். இவர் பல நாட்களாக பெண்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் ஆபாச எஸ்.எம்.எஸ்., படங்கள், வீடியோக்கள் அனுப்பி தொந்தரவு செய்துள்ளார்.
இவர் மீது அதிகமான புகார்கள் குவிய காவல் துறை இவர் மீதான விசாரணையை தீவிரப்படுத்தி கைது செய்துள்ளனர். பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில் இவர் மூன்று பிரீபெய்ட் சிம் கார்டுகளை வைத்து தனக்கு தோன்றும் எண்களுக்கு போன் செய்து, அதில் பெண்கள் பேசினால் அந்த எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.
அவரது செல்போனில் 2100 பெண்களின் எண்கள் இருந்ததாக காவல் துறையினர் கூறியுள்ளனர். அவரிடம் இருந்து மூன்று சிம் கார்டுகளும், இரண்டு செல்போன்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.