Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிக்கன் பக்கோடாவிற்காக ஒரு கொலை!!

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2016 (11:55 IST)
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், நந்திகோடூரு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன். சிக்கன் பக்கோடா கொசுறு கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இவர் அடித்து கொல்லப்பட்டார்.


 
 
ஒரு உணவகத்தில், சிக்கன் பக்கோடா சாப்பிட்டு விட்டு, மேலும் கொசுறு கொஞ்சம் வேண்டுமென உணவக ஊழியரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது. 
 
இதனால் ஊழியருக்கும், சந்திரமோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. ஹோட்டல் ஊழியரை அடிப்பதை கண்டு, மற்ற ஊழியர்களும் சந்திரமோகனை அடித்துள்ளனர். 
 
பின்னர் சந்திரமோகன் பலத்த காயங்களுடன் தனது வீட்டாரை அழைத்துச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் உணவக ஊழியர்கள் மீண்டும் சந்திரமோகனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
 
இதில் படுகாயமடைந்த சந்திர மோகனை அவரது உறவினர்கள் கர்னூல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கர்னூல் போலீஸார், உணவக உரிமையாளர் உட்பட 4 ஊழியர்களை கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments