ஒருதலை காதல் கொடூரம்: காதலிக்க மறுத்த பெண்ணை மாடியிலிருந்து வீசிய வாலிபர்
, வியாழன், 22 செப்டம்பர் 2016 (23:54 IST)
ஒருதலை காதல் விவகாரத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை மாடியில் இருந்து வீசிய வாலிபரை காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் மங்கள்பூரி அவந்திகா குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 21 பெண்ணை அமித் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்து உள்ளார். பேஸ்புக் மூலமாக இப்பெண்ணுடன் 2 வருடங்களுக்கு முன்பு நட்பாகியுள்ளார் அமித்.
இருவருக்கும் இடையே காதல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மகளின் காதல் தாயாருக்குத் தெரிய வந்தது. அவர் விசாரித்துப் பார்த்ததில் அமித் வேலையில்லாதவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து காதலுக்கு தாயார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பெண் வசித்த வீட்டிற்கு சென்ற அமித் நேற்று சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அமித், அப்பெண்ணை வீட்டின் பால்கனியிலிருந்து தூக்கி கீழே போட்டுவிட்டார். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கை, கால், இடுப்பு ஆகியவை முறிந்து விட்டதாக கூறப்படுகிறது. அமித்தை அப்பகுதியினர் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அடுத்த கட்டுரையில்