Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டு ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த வாலிபர் பெற்றோருடன் கைது

இரண்டு ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த வாலிபர் பெற்றோருடன் கைது
, வெள்ளி, 23 ஜனவரி 2015 (18:23 IST)
ஆசை வார்த்தைக் கூறி சிறுமியை அழைத்து வந்து இரண்டு ஆண்டுகளாக வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்த மகன் பெற்றோருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இங்குள்ள கண்டமால் மாவட்டத்தை சேர்ந்தவர் கோலாக்கா பிஹாரி டிகல்(27). பொறியியல் துறை டிப்ளமோ பட்டதாரியான இவர், ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை திருமண ஆசை காட்டி மயக்கி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
 
டிகலின் பெற்றோர் அந்த பெண்னை சம்பளம் இல்லாத வேலைக்காரியாக பயன்படுத்திக்கொண்டனர். பெற்றோரின் ஒத்துழைப்புடன் அவளை கோலாக்கா பிஹாரி டிகல் ’செக்ஸ் அடிமையாக’ பயன்படுத்திக்கொண்டார்.
 
அந்த குடும்பத்தில் இரண்டு ஆண்டுகளாக சிக்கிக்கொண்டு தாங்க முடியாத கொடுமையை அனுபவித்து வந்த சிறுமியின் துயர நிலைமையை அறிந்த தொண்டு நிறுவனம் ஒன்று மாதம் 24ஆம் தேதி அந்த சிறுமியை அவர்களின் பிடியில் இருந்து டிசம்பர் மீட்டு வந்து ஒரு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.
 
தனக்கு நேர்ந்த அனுபவங்களை எல்லாம் நீண்டதொரு கடிதமாக எழுதிய சிறுமி, அதனை காவல் துறையினருக்குப் பதிவு தபாலில் அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, அந்த கடிதத்தையே புகாராக பதிவு செய்த காவல் துறையினர் புகார் அளிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிக்கு விரைந்தனர்.
 
அங்கு வசித்துவரும் கோலாக்கா பிஹாரி டிகல், அவரது தந்தை பிரசாந்த் டிகல், அரசு ஊழியராக பணிபுரியும் தாய் சுபாஷினி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
பாதிக்கப்பட்ட சிறுமியும், அவரை இரண்டாண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்த கோலாக்கா பிஹாரி டிகலையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil