Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்-ல் வாலிபரை கத்தியால் குத்தும் திருடன் : அதிர்ச்சி வீடியோ

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2016 (11:55 IST)
ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொண்டுக்கும் வாலிபர் ஒருவரை, உள்ளே நுழைந்த திருடன் ஒருவன், கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் வீடியோவாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில், ஒரு வாலிபர் பணம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, அங்கு ஒரு திருடன் நுழைந்தான். பின் அந்த வாலிபரை, மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி அவரிடமிருந்து பணத்தை பறிக்க முயன்றான்.
 
ஆனால், சுதாரித்த அந்த வாலிபர், அவனை பிடிக்க முயன்றார். ஆனால் அவன் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஏடிஎம்-ல் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காயம்பட்ட அந்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நலமுடன் இருப்பதாக தெரிகிறது.


 

 
இந்நிலையில், கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயன்ற அந்த வாலிபரை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். அவன் பெயர் நவீன் பிரிஹர் என்பதும், தனக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால் அந்த செயலில் ஈடுபட்டதாக அவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். 
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments