Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை வாங்கித் தருவதாகக் கூறி லாட்ஜில் வைத்து கற்பழித்த வாலிபர் தப்பி ஓட்டம்

Webdunia
வியாழன், 2 ஜூலை 2015 (19:52 IST)
இளம்பெண் ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லாட்ஜில் வைத்து கற்பழித்துவிட்டு, அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடியுள்ளார்.
 
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 22 வயதான ஒரு பெண்ணிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி வாலிபர் ஒருவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு விடுதியில் தங்கி இருந்தபோது இளம் பெண்ணை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
 
எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்த அந்த பெண் ஜோத்பூர் கிராமத்துக்கு வந்தார். அங்கு ஒரு கும்பல் அந்த பெண்ணை இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது. அவர்களிடம் இருந்து தப்பி அந்த பெண் அங்குள்ள ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயில் நிலையத்தில் தனியாக தவித்து கொண்டிந்த அந்த பெண்ணை ஒரு கும்பல் மடக்க முயன்றது.
 
அவர்களிடம் சிக்காமல் தப்பிய அந்த பெண் ஒரு ஆட்டோவில் ஏறி அழுத படி சென்று கொண்டு இருந்தார். சாலையில் நின்று போக்குவரத்தை ஒழுங்குப் படுத்திக்கொண்டு இருந்த உதவி துணை ஆய்வாளர் ஆட்டோவில் அழுது கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்து ஆட்டோவை நிறுத்தி விசாரித்தார்.
 
அப்போது அந்த பெண்ணின் பரிதாப நிலை தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த பெண்ணை பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
 

அதிமுக ஆட்சியில் ரூ.6,000 கோடி நிலக்கரி ஊழல்.? பிரபல நாளிதழில் அதிர்ச்சி ரிப்போர்ட்.!!

விவோ Y200 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகம்.. என்னென்ன சிறப்பு அம்சங்கள்? விலை என்ன?

அடிக்கிற வெயில் அப்படி..! பாலைவன மண்ணில் பப்படம் சுடும் ராணுவர் வீரர்! – வைரலாகும் வீடியோ!

பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றால் அமித்ஷா மகிழ்ச்சியாக இருப்பார்: ப சிதம்பரம்

இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!