Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்ஃபி ஸ்டிக்கில் 2 கிலோ தங்கம் கடத்திய வாலிபர் கைது

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (18:44 IST)
செல்பி கேமரா ஸ்டிக்கில் 2 கிலோ தங்கம் கடத்திய வாலிபர் சிக்கினார். மேலும், அவரிடம் இருந்து பையை பறித்து தப்பிய 3 பேரையும் கைது செய்துள்ளனர்.
 

 
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் முகமதுயாசின் (35) மேற்குவங்க மாநிலத்தின் அவுராவில் இருந்து கோழிக்கோட்டுக்கு ரயிலில் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை ரயில் பாலக்காடு ஸ்டேஷன் அருகில் வரும் போது, முகமது யாசினிடம் இருந்த பையை 3 பேர் பறித்துக்கொண்டு ரயிலில் இருந்து தப்ப முயன்றனர்.
 
இதை கண்ட பாலக்காடு ரயில்வே போலீசார் அந்த 3 பேரையும் துரத்திச்சென்று கைது செய்தனர். பிடிபட்டவர்கள் காசர்கோடு முகமது இக்பால் (29), போதுர்கா அர்பத் (24) அப்துல் ரசீத் (27) என தெரிந்தது. இது குறித்து முகமது யாசின், புகார் கொடுக்க ரயில்வே காவல் துறையினரிடம் வந்தார்.
 
அப்போது, அவரிடம் விசாரணை செய்த காவல் துறையினர் அந்த பையை சோதனை இட்டனர். அதில் செல்ஃபி எடுக்கும் ஸ்டிக் ஒன்று இருந்தது. அந்த ஸ்டிக்கை பிரித்து பார்த்த போது உள்ளே சுமார் ரூபாய் 47லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
 
இதனை அடுத்து முகமது யாசின் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments