Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பசுவதை தடைச் சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவேண்டும் : பாபா ராம்தேவ்

பசுவதை தடைச் சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவேண்டும் : பாபா ராம்தேவ்
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (20:20 IST)
பசுவதை தடைச் சட்டத்தை நாடுமுழுவதும் பிரதமர் நரேந்திர மோடி நடைமுறைப் படுத்தவேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 
 
இதுகுறித்து அவர் கூறுகையில், “உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாகக் கூறி முதியவர் ஒருவர் கிராமவாசிகள் சிலரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோசமான அரசியல் இருப்பதாகவே கருதுகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, இதில் தலையிட்டு உடனடியாக இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதோடு உத்தரப் பிரதேச மாநிலத்தில் பசுவதை தடைச்சட்டத்தை கொண்டுவர முடியுமெனில் நாடு முழுவதும் இதை நடைமுறைப்படுத்துவது பற்றி பிரதமர் சிந்திக்க வேண்டும்.” என்றார். 
 
இவரின் இந்தப் பேச்சு எப்போதும் போல் வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil