பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது: முன்னாள் முதல்வர்

Webdunia
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (09:43 IST)
கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இப்போதே அங்கு தேர்தல் பிரச்சாரம் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெங்களூரில் நேற்று செயற்குழு கூட்டத்தில் பேசிய எடியூரப்பா மத்திய, மாநில அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 130 இடங்களுக்கு மேல் கைப்பற்ற வேண்டும் என்றும் பேசினார்.
 
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே முதல்வர் போட்டி தொடங்கி விட்டதால் கர்நாடக மாநிலத்தில் பாஜக வெற்றி பெறுவது எளிதாக உள்ளது என்றும் தெரிவித்தார். 
 
பசுவதை தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளோம், அயோத்திகள் ராமர் கோயில் கட்டுகிறோம் ஆகிய சாதனைகளை பாஜக செய்துள்ளது என்றும் அதனால் எந்த ஒரு கட்சியின் ஆதரவு இல்லாமல் பாஜக தனித்து ஆட்சிக்கு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments