Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக தேர்தல்: பதவியேற்புக்கு நாள் குறித்த எடியூரப்பா...

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (13:19 IST)
கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் 15 ஆம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், தனது பதவியேற்பு நாளை எடியூரப்பா அறிவித்துள்ளார். 
 

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், 17 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. நேற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடியூரப்பா இதை பகிரங்கமாக அறிவித்தார்.
 
மேலும் இது குறித்து பிரச்சாரத்தின் போது அவர் பேசியது பின்வருமாறு, கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்த பின் பாஜக அலை எழுந்துள்ளது. 
 
நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 130 தொகுதிகளையாவது நாங்கள் வெல்வது உறுதி. தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக எப்படிப்பட்ட பலமான கட்சி என்பதை மற்ற கட்சிகள் உணரும். 
 
வரும் 17 ஆம் தேதி, பெங்களூரிலுள்ள, கண்டீரவா விளையாட்டு அரங்கில் நான் முதல்வராக பதவியேற்பேன். பிரதமர் மோடிக்கும் விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments