Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக தேர்தல்: பதவியேற்புக்கு நாள் குறித்த எடியூரப்பா...

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (13:19 IST)
கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் 15 ஆம் தேதி வெளியிடப்படும். இந்நிலையில், தனது பதவியேற்பு நாளை எடியூரப்பா அறிவித்துள்ளார். 
 

கர்நாடக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், 17 ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளதாக அறிவித்துள்ளார் எடியூரப்பா. நேற்று, பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது எடியூரப்பா இதை பகிரங்கமாக அறிவித்தார்.
 
மேலும் இது குறித்து பிரச்சாரத்தின் போது அவர் பேசியது பின்வருமாறு, கர்நாடகாவில் பிரதமர் மோடி பிரசாரம் செய்த பின் பாஜக அலை எழுந்துள்ளது. 
 
நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. 130 தொகுதிகளையாவது நாங்கள் வெல்வது உறுதி. தேர்தல் முடிவுக்கு பிறகு பாஜக எப்படிப்பட்ட பலமான கட்சி என்பதை மற்ற கட்சிகள் உணரும். 
 
வரும் 17 ஆம் தேதி, பெங்களூரிலுள்ள, கண்டீரவா விளையாட்டு அரங்கில் நான் முதல்வராக பதவியேற்பேன். பிரதமர் மோடிக்கும் விழாவிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

திருமலை கோயிலில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவில் தேவஸ்தானம் எச்சரிக்கை..!

ரூ.15,000 சம்பளம் வாங்கிய அரசு அலுவலகருக்கு ரூ.30 கோடிக்கு மேல் சொத்து.. சோதனையில் அதிர்ச்சி..!

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

அடுத்த கட்டுரையில்
Show comments