Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் இந்திய கொரோனா என சொல்லக்கூடாது! – புதிய பெயர் சூட்டிய உலக சுகாதார அமைப்பு!

Webdunia
செவ்வாய், 1 ஜூன் 2021 (08:51 IST)
இந்தியாவிலிருந்து பரவிய மாற்றமடைந்த வைரஸை இந்திய கொரோனா வைரஸ் என குறிப்பிடக்கூடாது என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு அதற்கு புதிய பெயர் சூட்டியுள்ளது.

உலகம் முழுவது கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ்களுக்கு அறிவியல் பெயர்கள் இருந்தாலும் பொதுவில் அந்தந்த நாடுகளின் பெயரை குறிப்பிட்டே வைரஸ்களின் பெயர் அழைக்கப்பட்டது. இதற்கு இந்திய அரசு கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் வைரஸை அந்தந்த நாடுகளின் பெயரில் அழைப்பதை தவிர்க்க மாற்றமடைந்த வைரஸ்களுக்கு பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார அமைப்பு. அதன்படி இந்தியாவில் முதலில் பரவிய பி1.617.1 எனும் வைரஸிற்கு ”கப்பா வேரியண்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவில் கண்டறியப்பட்ட மாற்றமடைந்த கொரோனா வைரஸ் பி1.617.2 க்கு “டெல்டா வேரியண்ட்” என பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments