Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் ஜீன்ஸ் அணியவும் செல்போன் பயன்படுத்தவும் தடை: பஞ்சாயத்து உத்தரவு

Webdunia
சனி, 20 டிசம்பர் 2014 (11:40 IST)
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து ஒன்றில், பெண்கள் வழி தவறிச் செல்ல முக்கியக் காரணங்களாக இருப்பதாகக் கூறி ஜீன்ஸுக்கும், செல்போனுக்கும் தடை விதித்துள்ளது.

ஜீன்ஸ் அணிவதும், செல்போன் பயன்படுத்துவதும் பெண்கள் வழிமாறி செல்ல முக்கியக் காரணங்களாக அமைவதாகவும், அதனை பெண்கள் பயன்படுத்தக் கூடாது என்றும்  சிங்கா பஞ்சாயத்தில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பஞ்சாயத்தில் உள்ள குடும்பத்தினருக்கு, அவர்கள் வீட்டு பெண்களுக்கு ஜீன்ஸ் மற்றும் செல்போன் வாங்கிக் கொடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தடை உத்தரவு 2015ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அந்தப் பஞ்சாயத்துக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments