Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிலத்தை மீட்க சென்றவர்களை டிராக்டரை ஏற்றிக் கொல்ல முயன்ற பெண்- வீடியோ இணைப்பு

நிலத்தை மீட்க சென்றவர்களை டிராக்டரை ஏற்றிக் கொல்ல முயன்ற  பெண்- வீடியோ இணைப்பு
, வியாழன், 23 ஜூலை 2015 (11:47 IST)
உத்தர பிரதேசம் பிஜ்னோர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான நிலம் ஒன்று இருந்தது. அதனை அப்பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து நிலத்தை மீட்பதற்காக அந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அப்பகுதிக்குச் சென்றனர்.இதனால் ஆத்திரமடைந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி கைதுப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். மேலும் அந்த பெண்கள் மீது டிராக்டரை ஏற்றி  கொல்ல முயன்றுள்ளார். இதில் ஒரு பெண் ட்ராக்டர் அடியில் சிக்கிக்கொண்டார். ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அந்த பெண் உயிர் தப்பினார். இந்த காட்சி விடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.அப்போது அவரை போலீஸார் மரியாதையான முறையிலேயே நடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil