Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவாவில் 20 ஆண்டுகளாக நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (13:58 IST)
கோவாவில் 20 ஆண்டுகளாக நிர்வாணமாக அடைத்து வைக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் மீட்டனர்.





 
கோவா மாநிலம் கேண்டலிம் பகுதியில் 50 வயதுடைய பெண் ஒருவர் நிர்வாண நிலையில் ஒரு வீட்டின் சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளார். இச்செய்தியை கேள்விப்பட்ட தன்னார்வ நிறுவனர்கள் சிலர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை அங்கிருந்து மீட்டனர். பின் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் அடைக்கப்பட்ட காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
அந்த பெண் அடைக்கப்பட்டு இருந்த அறையில் மின்சாரம் எதுவும் இல்லை. அது அந்த பெண்ணின் சகோதரர் வீடு என்று கூறப்படுகிறது. கதவின் சிறிய துவாரம் வழியாக அந்த பெண்ணுக்கு உணவு அளிக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 20 வருடங்களாக அந்த பெண் அந்த இருட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments