Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசைக்கு இணங்க அழைத்த அதிகாரியை செருப்பால் அடித்த பெண்

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2016 (13:54 IST)
லஞ்சம் கேட்டதுடன், ஆசைக்கும் இணங்க அழைத்த ஒரு அரசு அதிகாரியை, ஒரு பெண் மின்துறை காண்டிராக்டர் செருப்பால் அடித்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
அந்த பெண் காண்டிராக்டருக்கு மின்சார துறையில் இருந்து பணம் வரவேண்டியிருந்தது. எனவே அந்த தொகையை வழங்க அனுமதிக்குமாறு மின்துறை அலுவலக கூடுதல் செயற்பொறியாளர் ரவிக்குமார் என்பவரை அவர் அணுகினார்.
 
அதற்கு, ரவிக்குமார் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். அதோடுவிடாமல், அந்த பெண்ணை தனது இச்சைக்கு இணங்க வேண்டும். அப்போதுதான் அந்த பில் தொகையை அனுமதிப்பேன் என்று அவர் கூறிவிட்டார். அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை. ஆனால் ரவிக்குமார் அந்த பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
 
மேலும், அந்த பெண்ணின் மொபைல் போனுக்கு, ஆபாச எஸ்.எம்.எஸ் களையும் அனுப்பி வந்துள்ளார். இதனால் அந்த பெண் பொறுமை இழந்தார். அதிகாரிகள் கூட்டம் நடப்பதை தெரிந்து கொண்ட அந்த பெண், நேராக அங்கு சென்று அதிகாரிகளின் கண் முன்னாலேயே, ரவிக்குமாரை செருப்பால் கன்னத்தில் அடித்துள்ளார்.
 
அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை தடுக்க முயன்றனர். உடனே அவர், ரவிக்குமார் தனக்கு அனுப்பிய எல்லா எஸ்.எம்.எஸ் களையும் அவர்களுக்கு காட்டினார். அதனால் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர்.
 
அந்த பெண் லாலாப்பேட்டை காவல் நிலையத்தில், ரவிக்குமார் மீது புகார் கொடுத்தார். மேலும், ரவிக்குமார் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!