Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடப்பாவமே !! பெண் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த வாலிபர்

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:50 IST)
தெலங்கானா மாநிலம் வாரன்கல் அடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார்.
இந்நிலையில், இக்கிராமத்தை அடுத்த சென்னரம் என்ற ஊரில் வசிப்பவர் அவினாஷ். இவர் அம்மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இவரது காதலை ஏற்க மாணவி மறுத்துள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் ஆத்திரமடைந்த அவினாஷ் சாலையில் சென்றுகொண்டிருந்த மாணவியை வலுக்கட்டாயமாகப்  பிடித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
 
தீயில் எரிந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மாணவியை மீட்ட பொதுமக்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
 
உடலில் முக்கால் வாசி தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
தற்போது  கைது செய்யப்பட்டுள்ள அவினாஷ் மீது  போலீஸார் வழக்கு பதிவு செய்து அவனிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments