Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடப்பாவமே !! பெண் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்த வாலிபர்

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (11:50 IST)
தெலங்கானா மாநிலம் வாரன்கல் அடுத்த ராமச்சந்திராபுரம் பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார்.
இந்நிலையில், இக்கிராமத்தை அடுத்த சென்னரம் என்ற ஊரில் வசிப்பவர் அவினாஷ். இவர் அம்மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இவரது காதலை ஏற்க மாணவி மறுத்துள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் ஆத்திரமடைந்த அவினாஷ் சாலையில் சென்றுகொண்டிருந்த மாணவியை வலுக்கட்டாயமாகப்  பிடித்து அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது.
 
தீயில் எரிந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மாணவியை மீட்ட பொதுமக்கள் அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
 
உடலில் முக்கால் வாசி தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
தற்போது  கைது செய்யப்பட்டுள்ள அவினாஷ் மீது  போலீஸார் வழக்கு பதிவு செய்து அவனிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments