Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை

Webdunia
வியாழன், 22 செப்டம்பர் 2016 (00:34 IST)
கேரளாவில் இரண்டு குழந்தைகளை கொன்று தானும் தூக்குப்போட்டு ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்தவர் தெகன்மலா லிஜோய். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜிஷாமோள் (37). ஜிஷாமோள் மெலட்டூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
 
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அன்னமோள் (11) மற்றும் மாத ஆண் குழந்தை ஆல்பர்ட் (1). நேற்று முன்தினம் காலை ஜிஷாமோளின் வீட்டின் கதவு நீண்டநேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது வீட்டு கதவை தட்டினார்கள்.
 
ஆனால் கதவு திறக்கப்படவில்லை. கதவும் உட்புறமாக பூட்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து போலீசுக்கும், ஜிஷாமோளின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.
 
பின்னர், ஜிஷாமோள் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது. மேலும், தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றதும் தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்துகொண்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments