Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் பெண் பாலியல் பலாத்காரம்; தூக்கி வீசியதில் காலை இழந்த கொடூரம்

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2016 (04:32 IST)
ஓடும் ரயிலில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, அவரை ரயிலிலிருந்து வெளியே தூக்கி வீசிய கொடூரம் நடந்துள்ளது.
 

 
உத்தரப்பிரதேச மாநிலம் ஆதிகாரில் இருந்து சகாகஞ்ச் நகருக்கு தாம்சா பயணிகள் ரயில் சென்றுள்ளது. இதில், ஆதிகாரைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, அந்தப் பெண் இருந்த பெட்டிக்குச் சென்ற இரண்டு பேர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
பின்னர், ரயிலிலிருந்து அந்த பெண்ணை வெளியே தூக்கி வீசியுள்ளனர். கஜாகார்டு என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே ஆடைகள் களைந்த நிலையில் மயங்கிக் கிடந்த அந்த பெண்ணின் ஒருகால் துண்டானதோடு, உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்துள்ளன.
 
அந்த வழியே சென்ற கிராமமக்கள், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு வாரணாசி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்