Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடிபோதையில் சில்மிஷம் செய்த சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தை பழுக்க வைத்த பெண்

குடிபோதையில் சில்மிஷம் செய்த சப்-இன்ஸ்பெக்டரின் கன்னத்தை பழுக்க வைத்த பெண்
, செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (13:01 IST)
குஜராத் மாநிலம் அகமதாபாத்  அருகே உள்ள தக்கர்நகரில் உள்ள புறவழிச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்தை சீரமைக்க அம்ரித்ஜி  என்ற சப் இன்ஸ்பெக்டர் அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் மது அருந்திய நிலையில் இருந்த அம்ரித்ஜி  அந்த பகுதியில் இருந்த சாலையோர வியாரம் செய்யும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார்.

இதனால் கோபம் அடைந்த அந்த பெண், போலீஸ் அதிகாரியை கன்னத்தில் அறைந்து  தரதரவென இழுத்து சென்றார். தொடர்ந்து 7 முறை இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் பளார் விட்டார்.  இதனை கண்ட பொதுமக்கள் அந்த பெண்ணிற்கு ஆதரவாக இருந்தனர்.

இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  இதையடுத்து அம்ரிஜித்தை கைது செய்த போலீஸார் அவரை பணி இடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா அத்தையின் சிறை தண்டனைக்குப் பின் சதி உள்ளது - ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் பேட்டி