Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் இருந்து டிக்கெட் பரிசோதகர் தள்ளிவிட்டதில் பெண் மரணம்

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2015 (14:09 IST)
டிக்கெட் பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து பெண்ணை தள்ளிவிட்டதில் தனது மகன் - மகள் கண் எதிரில் சக்கரத்தில் சிக்கி அவர் பலியானார்.
 
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் இருந்து ஷாஜபூருக்கு மால்வா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. பெர்சாரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் அந்த ரயிலில் ஏறினார்கள்.
 
பொதுப் பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்ததால் ஓம்குமாரி தெம்ரே என்ற பெண் தனது மகன் மற்றும் 2 மகள்களுடன் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினார். அவர்களுடன் மேலும் சில பயணிகளும் ஏறினார்கள்.
 
அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் அவர்களை கீழே இறங்குங்கள் என்று சத்தம் போட்டார். இந்த சமயத்தில் ரயில் மெதுவாக புறப்பட்டது. ஓம் குமாரி செய்வதறியாது ரெயில் பெட்டியின் வாசல் அருகே தனது குழந்தைகளுடன் நின்று இருந்தார்.
 
அவர்களை நோக்கி வேகமாக வந்த டிக்கெட் பரிசோதகர் இன்னும் இறங்கவில்லையா? என்று கூறி அந்தப் பெண்ணை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளினார்.
 
இதில் அந்தப் பெண் தண்டவாளத்தில் விழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி அடிபட்டு இறந்தார். மகன் – மகள்கள் கண் எதிரில் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது.
 
இதன் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments