Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது போதையில் போலீசாரோடு தகராறு செய்த இளம்பெண் : வீடியோ

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2016 (17:14 IST)
மது போதையில் காரை ஓட்டி வந்த இளம்பெண் நடுரோட்டில் தகராறு செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
புது டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில், ராஜீவ் சவுக் மெட்ரோ ரயில்வே நிலையம் அருகில் நேற்று இரவு,  ஒரு காரில் வந்த இளம்பெண், தனக்கு முன்னால் சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை இடித்தார். 
 
அதன்பின் காரிலிருந்து இறங்கி, அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபருடன் தகராறில் ஈடுபட்டார். அந்த பெண் மித மிஞ்சிய போதையில் இருந்தார். அதனால் என்ன செய்வதென்று என்று புரியாமல் அந்த வாலிபர் திகைத்து நின்றார்.
 
அருகிலிருந்து வந்து விசாரித்த போலீசாரிடமும் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதி பரபரப்பானது.  தன் அப்பா சிபிஐ அதிகாரி என்றும், பத்தாயிரம் செலவழித்து சுலபமாக வெளியே வந்து விடுவேன் என்று அவர் கூறியதாக அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.
 
அந்த சம்பவம் வீடியோவாக வெளி வந்துள்ளது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

Show comments