Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலாடையை கழற்ற சொன்ன விமான நிலைய அதிகாரிகள்! – அதிர்ச்சியடைந்த பெண்!

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (16:37 IST)
பெங்களூரு விமான நிலையத்தில் மேலாடையை விமான நிலைய அதிகாரிகள் கழற்ற சொன்னதாக பெண் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் பல வந்து செல்கின்றன. சமீபமாக கொரோனா காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளும் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்த கிரிஷானி காத்வி என்ற பெண் “பெங்களூரு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் என்னுடையை மேலாடையை கழற்றும்படி சொன்னார்கள். ஒரு உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு சோதனை பகுதியில் நின்றது உண்மையில் வேதனைக்கு உள்ளாக்கியது. ஒரு பெண்ணை ஏன் நீங்கள் ஆடையை கழற்ற செய்ய வேண்டும்?” என்று பதிவிட்டுள்ளார்.

ALSO READ: அடுத்த கட்ட சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும் ரிஷப் பண்ட்!

இந்த ட்வீட் வைரலான நிலையில் பெங்களூரு விமான நிலையம் சார்பில் பெண்ணிடம் மன்னிப்பு கேட்கப்பட்டதுடன், இதுகுறித்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கும், பாதுகாப்பு குழுவினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அவருடைய அலைபேசி எண், விவரங்கள் கேட்கப்பட்ட நிலையில் சில நிமிடங்களுக்கு பின் அவரது ட்வீட் டெலிட் செய்யப்பட்டுள்ளது. அவர் எதனால் அதை டெலிட் செய்தார் என்பது குறித்து தெரியவரவில்லை.

Edit By Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments