Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோடு ரோலரை ஏற்றி நொறுக்கப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள்.. ஆறாக ஓடிய மது..!

Siva
சனி, 10 ஆகஸ்ட் 2024 (07:38 IST)
ஆந்திர மாநிலத்தில் ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை ரோடு ரோலரை வைத்து நொறுக்கப்பட்ட நிலையில் மது ஆறாக ஓடியதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஆந்திர மாநிலத்தில் சட்டவிரோதமாக வெளி மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டது.

பல்வேறு வகை வகையில் 27,568 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் மதிப்பு ரூ.36 லட்சம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கலால் சட்டத்தின்படி பறிமுதல் செட் செய்யப்பட்ட மது பாட்டில்களை ரோடு ரோலரை விட்டு காவல்துறையினர் நொறுக்கினர். அப்போது பாட்டில்கள் உடைந்து சிதறி மது ஆறாக ஓடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து திருப்பதி எஸ்பி சுப்பராய்டு அவர்கள் கூறிய போது ’மது பாட்டில்களை கடத்தி வருவது சட்டப்படி குற்றம் என்றும் குறிப்பாக இளைஞர்கள் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை அழித்துக் கொள்ள வேண்டாம் என்றும் சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

மோனலிசாவுக்கு நடிக்க சான்ஸ் குடுத்தது இதுக்குதானா? பாலியல் வன்கொடுமை வழக்கில் இயக்குனர் கைது!

ரம்ஜான் தொழுகை நடந்தபோது நிலநடுக்கம்.. மியான்மரில் 700 பேர் பலியா?

தமிழ்நாட்ட பாருங்க.. மராத்தி பேசலைன்னா அடிங்க! - ராஜ் தாக்கரே ஆவேசம்!

நாளை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. எத்தனை நாள் திறந்திருக்கும்?

அடுத்த கட்டுரையில்
Show comments