Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? - சுஷ்மாவுக்கு ராகுல் கேள்வி

லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? - சுஷ்மாவுக்கு ராகுல் கேள்வி
, செவ்வாய், 11 ஆகஸ்ட் 2015 (10:09 IST)
லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? என்பதை சுஷ்மா வெளிப்படுத்தினால் நாடாளுமன்றம் செயல்படும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
 

 
நாடாளுமன்றத்தில் திங்களன்றும் லலித் மோடி மற்றும் வியாபம் ஊழல் விவகாரம் எழுப்பப்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கிவரும் நிலையில், போராட்டத்தை நிறுத்தவில்லை என்றால், ஆதரவு கிடையாது என்று சமாஜ்வாடி கட்சி திடீரென காங்கிரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.
 
இந்நிலையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, லலித் மோடி விவகாரத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? என்பதை சுஷ்மா வெளிப்படுத்தினால் நாடாளுமன்றம் செயல்படும் என்றும், நாடாளுமன்றம் நடைபெற வேண்டும் என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் அடிப்படை பிரச்சனைகளை எழுப்ப வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், ‘ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா மற்றும் பொருளாதாரக் குற்றவாளியான லலித் மோடி இடையே நடைபெறும் வர்த்தகம் தொடர்பான உண்மையையும் பிரதமர் மோடி முற்றிலுமாக நிராகரிக்கிறார்” என்றும் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil