Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தர பிரதேச மக்கள் உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள்! - ராகுல்காந்தி மகிழ்ச்சி பேட்டி!

Senthil Velan
செவ்வாய், 4 ஜூன் 2024 (19:47 IST)
இண்டியா கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்துக் கொள்வது குறித்து நாளை கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு முடிவு செய்வோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  நாங்கள் இந்த தேர்தலில் பாஜக என்ற கட்சியை மட்டும் எதிர்த்து போராடவில்லை என்றும் அமலாக்கத் துறை, சிபிஐ, நீதித்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் போராட வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார்.  
 
அரசியல் சாசனத்தை காக்க தேர்தலில் காங்கிரஸ் போராடியதாக தெரிவித்த ராகுல்,  மோடி தலைமையிலான அரசை மக்கள் புறக்கணித்து உள்ளனர் என்றும் தேர்தல் முடிவுகள் அதை உறுதி செய்துள்ளன என்றும் குறிப்பிட்டார்.
 
உத்தரப் பிரதேச மக்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை புரிந்து கொண்டு, அதனை பாதுகாக்கும் வகையில் இண்டியா கூட்டணியை ஆதரித்துள்ளனர் என்றும் அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். இண்டியா கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்துக் கொள்வது குறித்து நாளை கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு முடிவு செய்வோம் என்று அவர் தெரிவித்தார். 

ALSO READ: தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி படுதோல்வி..! பட்டாசு வெடித்து கொண்டாடிய எச். ராஜா..!

வயநாடு மற்றும் ராய்பரேலி என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாகவும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். இதில் எந்த தொகுதியை  தக்கவைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை.. மீண்டும் அதே விலையில்.. சென்னை நிலவரம்..!

கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.. கவன ஈர்ப்பு தீர்மானமா?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 55ஆக உயர்வு.. இன்னும் அதிகரிக்கும் என அச்சம்..!

நீட் தேர்வில் முறைகேடு செய்தால் ரூ1 கோடி அபராதம், 10 ஆண்டு ஜெயில்: புதிய சட்டம் அமல்..!

நீட் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் திடீர் ஒத்திவைப்பு .. திமுக மாணவர் அணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments