Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோரில் விஷம்: திருமணமான ஒரே வாரத்தில் கணவரை கொல்ல முயற்சித்த மனைவி?

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (21:41 IST)
திருமணம் ஆன ஒரே வாரத்தில் கணவரை அவருடைய மனைவி மோரில் விஷம் கலந்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆந்திர  மாநிலம் கர்னூல் என்ற பகுதியை சேர்ந்த லிங்கமையா என்பவருக்கும் நாகமணி என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் மணமக்களுக்கு விருந்துகள் தடபுடலாக நடந்தது. இந்த நிலையில் நாகமணி தனது தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். அவரை அழைத்துவர லிங்கமையா அவருடைய வீட்டிற்கு சென்றபோது, தனது கணவரை வரவேற்ற நாகமணி அவருக்கு குடிக்க மோர் கொடுத்துள்ளார் 
 
இந்த மோரை லிங்கமையா குடித்த ஒரு சில நிமிடங்களில் அவர் மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர். மருத்துவர்கள் நாகமணியை பரிசோதனை செய்து அவர் குடித்த மோரில் விஷம் கலந்திருப்பதாக தெரிவித்தனர்
 
இதனை அடுத்து லிங்கமையாவின் மனைவி நாகமணியை போலீஸார் விசாரணை செய்தனர். நாகமணிக்கு இந்த திருமணத்தில் இஷ்டமில்லை என்றும் அவரை வலுக்கட்டாயமாக அவரது பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் லிங்கமையா பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
 
ஆனால் நாகமணி இதை மறுத்தார். தான் கணவருக்கு கொடுத்தது கெட்டுப்போன மோராக இருக்கலாம் என்றும், அதனால் தனது கணவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், தான் கொலை செய்யும் நோக்கத்துடன் மோரை கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார் 
 
இந்த நிலையில் மீதமிருந்த மோரை போலீசார் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி உள்ளனர். இதுகுறித்த அறிக்கை வெளிவந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். திருமணம் ஆன ஒரே வாரத்தில் கணவனை மனைவியே மோரில் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments