Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எருமையை விற்கச்சொன்ன மனைவிக்கு துப்பாக்கி சூடு

Webdunia
சனி, 22 அக்டோபர் 2016 (15:45 IST)
வருமானம் இல்லாததால் எருமையை விற்க சொன்ன மனைவியை, கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்திரபிரேதச மாநிலம் லக்னோ பகுதியைச் சேர்ந்த மகேந்திரகுமார் பெட்ரொல் பங்க்கில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அண்மையில் மனைவி மாயா தேவியுடன் சந்தைக்கு சென்று எருமை மாடு வாங்கினார்.
 
அதற்கு தினமும் மாட்டுத் தீவனம் வாங்கி கொடுத்து குடும்ப செலவு அதிகமாகி உள்ளது. இதனால் மனைவி எருமை மாட்டை விற்று விடும்படி கணவனிடம் கூறியுள்ளார்.
 
அதில் ஆத்திரம் அடைந்த மகேந்திர குமார் துப்பாக்கியால் மனைவியை சுட்டார். மாயாதேவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு எழுந்த மகன் மற்றும் அக்கம் பக்கத்தினர். மாயாதேவியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
மாயாதேவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினர் மகேந்திரகுமார் மீது வழக்கு பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments