Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேஸ்புக் நட்பு டூ கள்ளக்காதல்: கணவனை போட்டு தள்ளிய மனைவி!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (19:28 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பேஸ்புக் நட்பு கள்ளக்காதலாக மாறி மனைவி கணவனை போட்டுத்தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மெத்னிப்பூர் நகரை சேர்ந்த மந்துப்பத்ரா, தென்கானல் என்ற இடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அருணா. இவருக்கு பேஸ்புக் மூலம் பல நண்பர்கள் இருந்தனர். அதில், சஞ்சய்குமார் என்ற எல்லை பாதுகாப்புபடை வீரரும் ஒருவர். 
 
அருணாவும், சஞ்சய்குமார் அடிக்கடி பேஸ்புக்கில் தொடர்பு கொள்வது வழக்கம். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. சஞ்சய்குமார் அடிக்கடி தென்கானலுக்கு வந்து அருணாவை சந்திப்பார். 
 
இந்த விவகாரம் மந்துப்பத்ராவுக்கு தெரிய வந்து, அவர் அருணாவை கண்டித்தார். இதனால், கணவரை கொன்றுவிட்டு சஞ்சய்குமாரை திருமணம் செய்து கொள்ள அருணா முடிவு செய்தார். 
 
திட்டம் தீட்டி, கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர், சஞ்சய் குமாரை வீட்டுக்கு அழைத்து கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். 
 
பின்னர் தனது கணவரை யாரோ கொன்று விட்டதாக போலீசில் நடகமாடினார். ஆனால், போலீஸாருக்கு இதில் சந்தேகம் வர, அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அருணாவும், சஞ்சய்குமாரும்தான் கொலை செய்தனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டு இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments