Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கணவரை எரித்த தீயில் விழுந்து மனைவியும் எரிந்து மரணம்

கணவரை எரித்த தீயில் விழுந்து மனைவியும் எரிந்து மரணம்
, திங்கள், 15 டிசம்பர் 2014 (13:15 IST)
இறந்துபோன கணவரை எரித்த தீயில் மனைவியும் விழுந்து இறந்துள்ளார்.
 
பீகார் மாநிலம் பாட்னா சஹர்சரா மாவட்டத்தில் உள்ள பர்மானியா என்ற கிராமத்தில் கவஹா தேவி(65), சரித்ரா யாதவ்(70) தம்பதியினர் இருந்து வந்தனர். சரித்ரா யாதவ் நீண்டநாள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் உடல் நலக்குறைவால்  மரணமடைந்தார். அவரது உடலை உறவினர்கள் சுடுகாட்டிற்கு எடுத்து சென்று உடலை தீ வைத்து மூட்டி விட்டு திரும்பிவிட்டனர்.
 
சரித்ரா யாதவின் மகன், வீட்டிற்கு சென்று பார்த்தப் பிறகுதான் தனது தாயார் அதாவது, சரித்ரா யாதவின் மனைவி காணாமல் போனது தெரிய வந்தது. பின்னர் அவர் மயானம் நோக்கி சென்றுள்ளார்.
 
ஆனால் அவர் போய் சென்றடையும் முன்பே, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் கவஹா தேவி எரிந்து கொண்டிருந்த கணவரின் உடல் மீது விழுந்து ஏரிந்து கொண்டிருந்துள்ளார். பின்னர் இருவருக்கும் சேர்த்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
 
இது குறித்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil