Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணை மதிப்பெண்களுக்கு தடை ஏன்? புதிய தகவல்

Webdunia
வெள்ளி, 20 ஜூலை 2018 (14:05 IST)
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது என்பது குறித்து சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த உத்தரவு ஏன் பிறப்பிக்கப்பட்டது என்பதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வின் மொத்த மதிப்பெண் 720 என்பது தெரிந்தது. ஆனால் மதுரை ஐகோர்ட் கிளையின் 196 கருணை மதிப்பெண் உத்தரவை செயல்படுத்தினால் ஒருசில மாணவர்களுக்கு 720 மதிப்பெண்களுக்கும் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. உதாரணமாக ரோல் நம்பர் 512017442 என்ற மாணவர் ஏற்கனவே 554 மதிப்பெண்கள் நீட் தேர்வில் பெற்றுள்ளார். இவருக்கு 196 கருணை மதிப்பெண்கள் கொடுத்தால் அவருடைய மொத்த மதிப்பெண் 750 ஆக மாறிவிடும். 720 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதிய ஒரு மாணவர் எப்படி 750 மதிப்பெண்கள் பெற முடியும் என்ற கேள்வியை சி.பி.எஸ்.இ எழுப்பியது.

இதன் காரணமாகவே இந்த வழக்கில் கருணை மதிப்பெண்களுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளதாக தெரிகிறது. இந்த பிரச்சனையை சுப்ரீம் கோர்ட் எப்படி முடிக்க போகிறது என்பதை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments