Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கன்றுக்குட்டியை கண்டுபிடித்தால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு

கன்றுக்குட்டியை கண்டுபிடித்தால் 50 ஆயிரம் ரூபாய் பரிசு
, வியாழன், 14 ஏப்ரல் 2016 (15:54 IST)
காணாமல் போன தன்னுடைய கன்றுக்குட்டியை கண்டுபிடித்து கொடுத்தாலோ அது குறித்த தகவல் அளித்தாலோ ரூபாய் 50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என ஒருவர் அறிவித்துள்ளார்.


 
 
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் 3 வயதுடைய கன்றுக்குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார். பாதுஷா என பெயரிட்டு அந்த கன்றுக்குட்டியை தன்னுடை குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல் வளர்த்து வந்துள்ளார் மனோஜ் குமார்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மனோஜ் குமார் வளர்த்து வந்த அந்த கன்றுக்குட்டி காணாமல் போய்விட்டது. இதனையடுத்து மனோஜ் குமார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கன்றுக்குட்டி காணாமல் போனது குறித்து புகார் அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசினார்.
 
பாதுஷா என்னும் அந்த கன்றுக்குட்டி என்னுடைய குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினர் போன்றது. அதனை பற்றி தகவல் தருபவருக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் குமார் தெரிவித்தார்.
 
அதுமட்டுமில்லாமல் மனோஜ் குமார் தந்து கன்றுக்குட்டி காணாமல் போனது குறித்து விளம்பர சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். கன்றுக்குட்டியின் அடையாளங்களை அந்த சுவரொட்டியில் குறிப்பிட்டுள்ளார் மனோஜ் குமார்.

Share this Story:

Follow Webdunia tamil