Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவை தொட்டாச்சு.. அடுத்து சூரியன்தான்! – ஆதித்யா விண்கலம் புறப்படும் தேதி?

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (15:47 IST)
இந்தியாவின் இஸ்ரோவின் விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம், நிலவின் தென்துருவத்தை அடைந்தது என்பதும் அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் தற்போது நிலவில் உலவி வருகிறது.

இந்த நிலையில்  இஸ்ரோவின் சந்திராயன் 3 விண்கலம் நிலவை அடைந்ததை அடுத்து சூரியனை ஆராய்ச்சி செய்யும் ஆதித்யாL1 என்ற விண்கலம் விரைவில் செலுத்தப்படும் என ஏற்கனவே பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

அதன்படி, சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை செப்டம்பர் இரண்டாம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துவதாக தகவல் வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள செய்தியில், '' 'ஆதித்யா எல் 1' என்ற விண்கலம் பிஎஸ்எல்வி என்ற ராக்கெட் மூலம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய்கிறது'' என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஆதித்யா விண்கலமும் ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments