Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது..? தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை..!

Senthil Velan
வெள்ளி, 15 மார்ச் 2024 (11:53 IST)
மக்களவைத் தேர்தல் தொடர்பாக புதிய ஆணையர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
 
இதனிடையே தோ்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். மற்றொரு தோ்தல் ஆணையா் அருண் கோயல், 2027-ஆம் ஆண்டு டிசம்பா் வரை பதவிக் காலம் உள்ள நிலையில், கடந்த 8-ஆம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
 
இதை அடுத்து இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவி காலியானதை தொடர்ந்து, புதிய தேர்தல் ஆணையர்களாக சுக்பீா் சிங் சாந்து, ஞானேஷ் குமாா் ஆகியோர் இன்று பதவியேற்றனர்.
 
இந்நிலையில் தேர்தல் ஆணையர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில், மக்களவை தேர்தல் தேதி மற்றும் எத்தனை கட்டங்களாக தேர்தலை நடத்துவது என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தேர்தல் தேதி இன்று மாலைக்குள்ளோ, அடுத்த இரண்டு நாட்களில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments