முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் சேவை சீரானது....பயனர்கள் மகிழ்ச்சி

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (14:54 IST)
உலகம் முழுவதும்  முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் சேவை சீராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் தகவல் தொடர்புக்கு பெரிதும் சார்ந்திருப்பதும் பயன்படுத்தி வருவது வாட்ஸ் ஆப் என்ற செயலிதான். பல கோடிப் பயனர்கள் இதைப் பயன்படுத்தி வரும் நிலையில், உரையாடல், பணம் அனுப்புதல், தகவல் அனுப்புதல் என அனைத்து வகையிலும் இது பயனுள்ளதாக உள்ளது.

இந்த நிலையில், இன்று திடீரென்று வாட்ஸ் ஆப் சேவை முடங்கியதால், இதன் பயனர்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சியடைந்தனர்.

ALSO READ: உலகம் முழுவதும் முடங்கிய வாட்ஸப்..! எப்போ சரியாகும்? – மெட்டா நிறுவனம் விளக்கம்!
 
இந்த நிலையில், இந்த கோளாறு விரைவில் சரிசெய்யப்படும் எனவும், மீண்டும் வாட்ஸப் பழையபடி வேலை செய்யும் என்றும் கூறியுள்ள மெட்டா நிறுவனம், பயனாளர்களின் சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்தது.

அதன்படி, சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து, முடங்கியிருந்த வாட்ஸ் ஆப் சேவை சீராகியுள்ளது. இந்தியாவில், டெல்லி, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments