Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (16:06 IST)
வாட்ஸ்அப்பை தடை விதிக்க கோரிய பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வாட்ஸ்அப்பிற்கு தடை விதிக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.


 

 
உலக அளவில் பிரபலமான சமுக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் அண்மையில் என்கிரிப்ஷன் என்னும் பாதுகாப்பு அம்சத்தை புதிதாக அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் தகவல் பறிமாற்றம் இருவருக்கு இடையே பாதுகாப்பாக இருக்கும். மூன்றாம் தரப்பினர் யாரும் பார்க்க முடியாது. 
 
இந்த பாதுகாப்பு அம்சம் தீவிரவாதிகளுக்கு உதவும் வகையில் இருக்கிறதாக குறிப்பிட்டு வாட்ஸ்அப்புக்கு தடை விதிக்க கோரி ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் சுதிர் யாதவ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். 
 
தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வாட்ஸ்அப்பிற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments