ஆளுநர் 2 ஆண்டுகளாக என்ன செய்துகொண்டிருந்தார்? கேரளா ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

Webdunia
வியாழன், 30 நவம்பர் 2023 (15:36 IST)
பஞ்சாப் மாநிலம் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள ஆளுநர்களுக்கு எதிராக இரு  மாநிலங்களைச் சேர்ந்த அரசும் தனித்தனியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தன.
 
இதில், இரு  மாநிலங்களைச் சேர்ந்த ஆளுர்களுக்கு கடுமையான கேள்வி எழுப்பி, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காதது ஏன் என்று சமீபத்தில்  உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, நெருப்புடன் விளையாடுகீர்கள் என்று எச்சரித்திருந்தது.
 
இந்த நிலையில்,  கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில்,  இம்மா நிலத்தில் ஆளு நராக ஆரிஃப்கான்   உள்ளார்.
 
இந்த நிலையில், கேரளம் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல்  இருந்ததால், உச்ச நீதிமன்றத்தில் கேரளம் அரசு வழக்குத் தொடுத்துள்ளது.
 
இந்த வழக்கு விசாரணையின்போது,'' ஆளுநர் ஆரிஃப்கான் 2 ஆண்டுகாளக என்ன செய்துகொண்டிருந்தார்? இதுகுறித்து கேரளம் அரசுக்கு ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் ஆளு நரின் அதிகாரம் தொடர்பாக வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்க நேரிடும்'' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!

அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments