Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தின அணிவகுப்பு; மேற்கு வங்கத்துக்கு அனுமதி மறுப்பு

Arun Prasath
வியாழன், 2 ஜனவரி 2020 (14:25 IST)
குடியரசு தினத்தன்று நடக்கவிருக்கும் அணிவகுப்பில் மேற்கு வங்க மாநில அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசு தின விழாவில் யூனியன் பிரதேசங்கள் உட்பட 56 அலங்கார ஊர்திகள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டன. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் மாநிலங்கள் சார்பில் 16 ஊர்திகள் அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகள் என, மொத்தம் 22 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் மேற்கு வங்க அலங்கார ஊர்தியில் அமைந்த காட்சிகள் பாதுகாப்பு அம்சங்களை மீறும் வகையில் இருப்பதாக ராணுவ அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து மேற்கு வங்கத்தின் திரிணாமுல் காங்கிரஸ், மத்திய அரசு திட்டமிட்டு அலங்கார ஊர்தியை புறக்கணிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments