Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் ஷூவுக்கு பாலீஸ் போட்ட காவல்துறை அதிகாரி

Webdunia
திங்கள், 25 மே 2015 (23:44 IST)
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் காலில் கிடந்த ஷூவுக்கு, பாதுகாப்பு சென்ற அதிகாரி பாலீஸ் போட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு வங்க மாநில திட்ட மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் ரச்பால் சிங். இவர் அம்மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழா ஒன்றுக்கு சென்றார்.
 
அப்போது, அவரது காலில் இருந்த ஷூவை கழற்றி, தனது ஷூ லேசை போட அமைச்சர் ரச்பால் சிங் முயன்றுள்ளார்.
 
இதனைக் கண்ட, அவரது பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர் ஓடி வந்து, ஷூ லேஸ் போட்டுவிட்டார். ஆனால், பாதுகாவலரின் இந்த செயலை அமைச்சர் ரச்பால் சிங் தடுக்காமல் ரசித்தாராம்.
 
இந்நிலையில், அமைச்சர் ரச்பால் சிங் ஷூவுக்கு காவலர் ஷூ பாலீஸ் போடும் புகைப்படம் ஊடங்களில் வெளியானதால், அமைச்சர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த விவகாரம் மேற்கு வங்க அரசுக்கு தற்போது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

Show comments