ஆளுனருக்கு பதில் இனி முதல்வரே துணை வேந்தர்! – மேற்கு வங்க அரசு முடிவு!

Webdunia
வியாழன், 26 மே 2022 (16:59 IST)
மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைகழகங்களில் ஆளுனருக்கு பதில் இனி முதல்வரே துணை வேந்தர் பதவியை ஏற்பதற்கான சட்டத்திருத்தத்தை மேற்கு வங்க அரசு கொண்டு வர உள்ளது.

மாநில பல்கலைகழகங்களில் செயல்பாடுகளில் ஆளுனருக்கு உள்ள அதிகாரம் குறித்து கடந்த சில நாட்களாக பெரும் சர்ச்சைகளும், விவாதங்களும் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தில் பல்கலைகழக விவகாரங்களில் ஆளுனரின் முடிவுகள் பிரச்சினையை ஏற்படுத்துவதாக தமிழக அரசு கண்டனம் தெரிவித்து வந்தது.

இதனால் பல்கலைகழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டப்பேரவையில் புதிய சட்டத்திருத்ததையும் தமிழக அரசு கொண்டு வந்தது.

இந்நிலையில் இதுபோன்று தற்போது மேற்கு வங்கத்தில் மாநில அரசால் நடத்தப்படும் பல்கலைகழகங்களில் ஆளுனருக்கு பதில் இனி முதல்வரே துணை வேந்தராக இருக்கும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில அமைச்சர் ப்ரத்யா பாசு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments