Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாங்கள் தமிழர்களை தாக்க மாட்டோம்: வாட்டாள் நாகராஜ்

நாங்கள் தமிழர்களை தாக்க மாட்டோம்: வாட்டாள் நாகராஜ்
, புதன், 21 செப்டம்பர் 2016 (14:46 IST)
கர்நாடகாவில் வாழும் தமிழர்களை கன்னடர்களாகதான் நாங்கள் கருதுகிறோம். தமிழர்களை ஒருபோதும் தாக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.


 

 
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சியினரும், கன்னட அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கன்னட சலுவாளி கட்சித்தலைவர் வாட்டாள் நாகராஜ் நேற்று  தமிழக கர்நாடக மாநில எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
 
அதன்படி ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே புளிஞ்சூர் சோதனைசாவடியில், வாட்டாள் நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் வாட்டாள் நாகராஜ் கூறியதாவது:-
 
காவிரி ஆறு கன்னடர்களுக்கு மட்டுமே சொந்தம். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம். கர்நாடகாவில் வாழும் தமிழர்களை கன்னடர்களாகதான் நாங்கள் கருதுகிறோம். நாங்கள் தமிழர்களை தாக்க மாட்டோம், என்று கூறினார்.    

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏழு கணவர்; சொகுசு வாழ்க்கை: மோசடி பேர்வழி கல்யாண ராணி சிக்கினார்!